Showing posts with label பழகிய பாதைகள். Show all posts
Showing posts with label பழகிய பாதைகள். Show all posts

Friday, December 20, 2013

பழகிய பாதைகள்

நன்றாக தெரிந்த வேலை செய்வதும் ஒரு அழகுணர்ச்சி, நன்றாக தெரியாத வேலையைச் செய்வதும் ஒரு அழகுணர்ச்சி. இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன் முதலாவது, உற்பத்தியாளர்கள் - இவர்கள் நாசுக்கான அமைப்பை விரும்ப மாட்டார்கள், செய்ததையே திரும்பத் திரும்பச் செய்வதில் மகிழ்ச்சியடைபவர்கள். இரண்டாவதாக, பராமரிப்பாளர்கள் - இவர்கள் ஒரே மாதிரியான வேலையைத் திரும்பச் செய்வதை வெறுப்பவர்கள். இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் மாற்று இல்லை. நான் இரண்டாவது வகையைச் சேர்ந்தவன். அதனால் தானோ என்னவோ பிரச்சனைகளைத் தீர்க்கும் வேலைகளைச் செய்வதில் மற்றவர்களை விட அதிகமாக மகிழ்ச்சி கொள்கிறேன். அது போல மற்றவர்களை விட சுத்தம் செய்வதை அதிகமாகவே வெறுக்கிறேன். ஆனால் செய்ய வேண்டுமென்றால் மற்றவர்களைப் போல என்னால் இறன்டும் செய்ய முடியும். நான் சுத்தம் செய்வது எப்படியென்றால் மக்கள் கோவிலுக்கு போவது போல - அதாவது புதிதாகக் கண்டுபிடிப்பதற்கு எதுவும் இல்லை. நான் புது விஷயங்களில் மிகவும் உஷாராக இருந்தாலும் கூட ஏற்கனவே பழக்கப்பட்டதுடன் மீண்டும் பழக்கப்பட்டுக் கொள்வேன். பழகிய பாதைகளில் செல்வது சில சமயங்களில் நன்றாக இருக்கும்.