Monday, September 9, 2013

விருந்தினர் விரிவுரையாளராக

போன வாரம் சனிக்கிழமை நான் என் நண்பன் திலிப்பிரபாகரன் உதவியால், பெருந்துறையில் உள்ள jkkn பொறியில் கல்லூரியில் விருந்தினர்  விரிவுரையாளராக சென்று embedded system 's  என்னும்  தலைப்பில் அங்கு  உள்ள இறுதி ஆண்டு EEE & ECE மாணவர்களுக்கு எனது உவமைகள் மற்றும் எனக்கு தெரிந்த, நான் அறிந்த பல கருத்துகள் மற்றும் செய்திகளை விளக்கினேன்.

மேலும் இந்த சந்தர்ப்பதால் என்னால் பல புதிய கோட்பாடுகளை அறிந்துகொள்ள முடிந்தது, அன்று இரவு ஈரோட்டில் இருந்து புறப்படும் பொழுது என் நண்பனிடம் இதை போன்று எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் தெரிவிக்கும்படி கூறினேன்.

நான் கல்லூரியில் விரிவுரையாற்றி கொண்டிருக்கையில் எனக்கு அவ்வப்பொழுது எந்த பசுமையான கல்லூரி நாட்களின் நிகழ்வுகள் என் மனதில் நிழலாடின, நீரம் கிடைத்தால் மீண்டும் ஒருமுறை என் கல்லூரிக்கு சென்று அங்கு உள்ள என் விரிவுரையாளர்களை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.

No comments:

Post a Comment