Saturday, November 7, 2020

வேதனைகள்!

படிக்க நினைத்த
புத்தகத்தை
ஒரே மூச்சில்
படித்தாகிவிட்டது

ஒவ்வொரு வேலையாக இழுத்து போட்டு செய்தாகிவிட்டது

உறவு, நட்புகளோடு அலைபேசியில்
பேசியாகி விட்டது 

பரபரப்பாக
வேலை பார்த்ததில் ஒதுங்கியிருந்த
வேதனைகள்

மீண்டும்
கூரைஏறி அமர்ந்த
கோழியாய்
மனதில் ஏறிவிட்டது

இன்னும் 
என்ன செய்வேன்?

No comments:

Post a Comment