Thursday, July 25, 2019

மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளேன், எழுதுகோல் இன்றி.

என் சொற்களை அறிய விருப்பம் இருப்பின், முதலில் உன் சொற்களை ஒதுக்கிவிடு.

ஏனென்றால் இவை என் எண்ணங்களின் வெறுமையான தருணங்கள்.
சிக்கல்கள், பதில் எதுவுமில்லாத இரைச்சல்கள்,
உணர்ச்சி ரீதியாகப் பார்த்தால் மிகவும் மோசமான அனுபவங்கள்.

என் சொற்கள் மீன்பிடிக்கிற கதை போல - மீனவருக்கு சுவாரசியமாக, சந்தோசமாக இருக்கும்.

ஆனால் மற்றவர்கள் ஏன்  அதை கேட்டு கொட்டாவி விடுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது.

No comments:

Post a Comment