Wednesday, November 27, 2013

போதிக்கும் வழி

கவராயம் இல்லாமல் ஒரு பரிபூரன வட்டம் வரைவது அசாத்தியம், மிகவும் கவனமாக, கோட்டு வரைபடக் கலையின் நியதியை நிணைவுகூர்ந்து முயன்றாலும் சரி.
ஒரு ஜென் குரு அப்படி வரைவார்; அல்லது ஒரு வடிவகணித வகுப்பில் போகிறபோக்கில் அப்படி வரைகிற ஆசிரியரும் உண்டு.
இரண்டுமே நீரில் அலையையும் அசைவையும் எழுப்பாமல் இறங்கும் இரகசியம்தான்,
இந்த இரகசியத்தை யாராலும் யாருக்கும் கற்றுத்தர முடியாது,
சொற்கள் இல்லாமல் போதிப்பதை தவிற.

1 comment: