Tuesday, November 5, 2013

சிட்டு குருவி

சிட்டு குருவி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்னும் ஆர்வமுடயது. காட்டிலே எந்த மூலையில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதன் கண்ணில் பட்டே தீரும். அது சம்பவம் நடைபெறும் இடத்தில் சென்று ஒய்வொழிவில்லாமல் கூக்குரல் எழுப்பி கொண்டே இருக்கும். தான் கண்ட செய்தியை காடு பூராவிற்கும் தெரியும் வரை சும்மா இருக்காது. அது காட்டில் மறைந்திருக்கும் திருடர்களை பிடித்து தரும், காணாமல் போகும் வளர்ப்பு பிராணிகளின் இருப்பிடத்தை தெரிவிக்கும்.

ஓரோர் நேரம் அது எல்லை மீறிய ஆர்வமும் காட்டும். முயலுக்ககவும், நரிகளுககவும் போட்டிருக்கும் வளையை பார்த்து, தனது இயற்கையான ஆர்வத்தில் அதை சுற்றி திரிந்து, கடைசியில் தானே அந்த வளையில் சிக்கி உயிர் விடுவதும் உண்டு.

No comments:

Post a Comment