Monday, December 16, 2013

அது

எல்லா சக்திகளிலும் பலமும், அதே சமயம் மேன்மையும் கொண்டது அது. உலகத்தின் எல்லா பொருள்களுக்கும் பிறப்பிடம். மண்ணிலுள்ள உயிர்களுக்கு தெய்விகமான விதிகளை அளிக்கிறது அது. உயிர்வாழும் எல்லாப் பிராணிகளுக்கும் இந்த விதிகளுக்குப் பணிந்துதான் ஆகவேண்டும். மனிதர்களின் முரட்டுப் புலன்களை மாற்றி பரிசுத்தமாக்குகிறது அது. மன்னர்கள், மக்கள் இவர்களின் செயல்களையும் பழக்கங்களையும் தூய்மைப் பதுத்துகிறது. பாலும் இரத்தமும் மண்டிய உலகில் சகோதர அன்பையும் தர்மத்தையும் பரப்பி சேவையில் பெருமையையும் காணச் செய்கிறது அது. யுத்தப் புகழும் ஆயுதப் பயிற்சியும் இந்த நற்பண்புகளை மனிதனுக்கு அளிக்காது. அந்த தெய்விக சக்தியால் இந்த உலகமானது அன்பும் அழியா அமைதியும் உறையும் இடமாக மாறிவிடும்.

No comments:

Post a Comment