Monday, December 2, 2013

சிக்கிக்கொள்ளுதல் / மாட்டிக்கொள்ளுதல்

நான் அடிக்கடி மாட்டிக்கொண்டு தவிப்பது  என்னிடம் உள்ள பொதுவான பிரச்சனைதான்.
வழக்கமாக நான் ஒரே நேரத்தில் நிறைய காரியங்கள் செய்ய நினைக்கும்போது இந்த மாதிரியான தவிப்பில் என் மனது மாட்டிக்கொள்ளும்.
கட்டாயம் சொற்கள் வரவேண்டும் என்று நான் முயற்ச்சி செய்யக்கூடாது, அப்படி செய்தால் இன்னும் அதிகமாக மாட்டிக்கொள்வேன்.
செய்யவேண்டிய விஷயங்களை பிரித்துக் கொண்டு அதற்குப் பிறகு ஒரு நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்யவேண்டும்.
நான் என்ன சொல்லவேண்டும் என்று நினைப்பதோடு, எதை முதலில் சொல்ல வேண்டுமென்றும் என்று முயற்சிக்கிறேன் - இது கஷ்டம்.
ஆகையால் இவையிரண்டையும் பிரித்துக்கொள்ளவேண்டும், என்னவெல்லாம் சொல்ல வேண்டுமென்று நினைகிறேனோ அதை முதலில் எந்த முறையிலாவது படியலிட்டுக் கொள்ளனும். அதற்குப் பிறகு அதை நான் சரியான முறையில் வரிசைபடுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment