Wednesday, December 18, 2013

மதிப்பாய்வு

நம்மளைப் பற்றிய மதிப்பாய்வு நம்மிடம் அதிகமாக இருக்கும்போது புதிய விபரங்களை அங்கீகாரம் செய்யக்கூடிய நம் திறமை குறைந்துவிடும் தர மெய்மையிலிருந்து நம்முடைய கர்வம் நம்மைத் தனிமைப்படுத்திவிடும். நாம் கோட்டைவிட்டு விட்டோம் என்று விபரங்களை காண்பிக்கும் போது நாம் அதை பெரும்பாலும் ஒத்துக் கொள்ள மாட்டோம். பொய்யான தகவல்கள் நம்மை நல்லவர் என்று காட்டும் போது, நாம் அதை விரும்பக்கூடும்.
பதற்றம், இது அறிவுக்கூர்மையின் அடுத்த பொறி. கர்வத்திற்க்கு எதிர் மறையானது. எது செய்தாலும் தவறாக செய்வோம் என்று உறுதியாக இருப்பதால் எதுவொன்றை செய்வதற்கும் பயப்படுவோம். "சோம்பேறித்தனத்தை " விட இது தான் நாம் ஒரு காரியத்தை ஆரம்பிப்பதை தாமதப்படுத்தும். அறிவுக்கூர்மையின் பொறியான பதற்றம் என்பது அளவுக்கு அதிகமான உத்வேகத்தினால் ஏற்படுவது, இதுதான் எல்லாவிதமான தவறுகளுக்கும் இட்டுச் செல்லும். எது சரி செய்யத் தேவையில்லையோ அதை சரி செய்வோம, கற்பனையில் உண்டான நோயை தொடர்ந்து கொண்டிருப்போம். நம்முடைய காட்டுத்தனமான முடிவுகளினால், பதற்றத்தினாலும் எல்லா வகையான தவறுகளையும் நம் வாழ்வில் உருவாக்குவோம். இந்தமாதிரியான தவறுகள் நேரும்போது அது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டதை உறுதிப்படுத்துவதாக அமையும். இது அதிக தவறுகளுக்கும் காரணமாக இருந்து நம்மை இன்னும் தாழ்த்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு இட்டுச் செல்லும்.

No comments:

Post a Comment